ஆந்திரா மெஸ் உணவு என்றால் எல்லோருக்கும் அதனுடைய காரமான உணவு நினைவுக்கு வரும். ஆனால் எனக்கு அதனுடைய சுவை மட்டும் தான் நினைக்கு வரும்.
அப்பா! என்ன சுவை. 25-30 ரூபாய்க்குல் சாப்பாட்டின் விலை இருக்கும். அன்லிமிட்டடு சாப்பாடு தான் போங்க! எப்போ போனாலும் நன்றாக இருக்கும். முதல்ல பப்பு பொடி. சோத்துல அந்த பப்பு பொடி பொட்டு, நெய்ய விட்டு சாப்பிட்ட, அதன் சுகமே தனிதான் போங்க. தொட்டுக்க அப்பிளம். மொரு மொருனு இருக்கும். சோறு செம சூடா இருக்கும்.
அடுத்து, சாம்பார் போட்டு, தொட்டுக்க அப்பிளம்(இரண்டாவது) மற்றும் கறீஸ்(பொறியல்). சூப்பரோ சூப்பர். அடுத்து ரசம். சூடாக இருக்கும். தொட்டுக்க அப்பிளம்(மூன்றாவது)
பின்னர் தயிர் தான். தொட்டுக்க ஊருகாய். செம ருசியாக இருக்கும். வயிறு முழுவதும் சாப்பிட்டு பின்னர் வேலை(மென்பொருள் வேலை) எவ்வாறு செய்ய முடியும். தூக்கம் தான் வரும்.
நான் சைவம் தான். ஆனால் அசைவ உணவுக்கு அமோக வரவேற்ப்பு. நீங்களும் ஆந்திரா மெஸ் போய்ட்டு சாப்பிட்டு மஜாவா இருங்க!
Comments
i am also want to write
i am also want to write blog
what i have to do ?
sign up with blogspot.com
sign up with blogspot.com
Unmaithan. Nalla ruchi.
Unmaithan. Nalla ruchi.
Post new comment