உன்னால் உலக நிகழ்வுகளை அறிந்து கொள்கிறேன்,
உன்னால் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெருகிறேன்,
உன்னுடன் எப்பொழுதும் ஒட்டி உறவாடி வருகிறேன்,
உன்னுல் ஒலியும் ஒளியும் பார்த்து மகிழ்கிறேன்,
மனிதர்களிடம் உறவாடி பொழுதினை கழித்தநாட்கள் சென்று
உன்னுடன் பொழுதை கழிக்கின்றேன்,
நான் சொல்வதையெல்லாம் கேட்கிறாயே..
நீ என்ன, எனது அடிமையா?
உன் தயவு இல்லாமல் என்னால் எதுவும் செய்முடியவில்லையே,
அப்படியென்றால், நான் உனக்கு அடிமையாகிவிட்டேனா...?
உன்னை நான் திட்டினாலும் சரி, அடித்தாலும் சரி, கொஞ்சினாலும் சரி
எனக்காக உழைக்கின்றாயே...?
உனக்காக, மேலிருக்கும் வரிகளை சமர்பிக்கிறேன்!
எனது அன்புக்குரிய கணினியே...
Comments
kavitha kavitha... nice one
kavitha kavitha... nice one :)
Very nice poem. I enjoyed
Very nice poem. I enjoyed the lyrics
Post new comment