சத்யம் நிறுவனத்தின் பங்குகள் 80% வீழ்ச்சி. ராமலிங்க ராஜூ தனது பதவியை இராஜினாமா செய்து விட்டார். நிறுவனத்தின் லாபத்தை அதிகமாக காட்டியதை ஒப்புக்கொண்டார். ராமலிங்க ராஜூ அனுப்பிய கடிதத்தின் நகல் இதோ உங்கள் பார்வைக்கு.




வரும் ஆண்டில் இந்திய ஐ.டியின் நிலை என்னவாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்திய ஐ.டி சரிவு தொடங்கிவிட்டது. 53,000 பேர்களின கதி என்னவென்று தெரியவில்லை. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள் குறைய வாய்ப்புள்ளது.
நீங்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
Comments
ஒரு
ஒரு வகையில் நான் ராமலிங்க ராசுவை நல்ல மனிதனாக பார்க்கிறேன் ... தான் செய்த தவறை பகிரங்கமாக ஒப்புக்கொள்ள நம்மில் எத்தனை பேருக்கு மனம் வரும் ... ஒன்று நாம் சாகும் வரை பொய்யை சொல்லி அந்த தவறை மறைப்போம் ... இல்லை ...வெளி உலகுக்கு உண்மை தெரிய வந்ததும் தற்கொலை செய்து கொள்வோம்(சிலர்).. இது தான் சராசரி மனித இயல்பு ...ஆனால் இவர் எந்த விசாரணை கமிசனும் இல்லை ...சிபிஐ - இல்லை தானாகவே கேட்காத உண்மைகளையும் ஒப்புக்கொண்டுள்ளார் ... நமது அரசியல் வாதிகள்..அரசாங்க அதிகாரிகள் ...டாட்டாக்கள் பிரலக்கள் அம்பானி-க்கள் பெண்களை சீரழித்து விட்டு சுததிரமாக உலவும் பொறுக்கிகள் ..... இவர்கள் எல்லாம் இன்னும் உண்மையை மறைத்து தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் .!!!
தான் செய்த தப்பை ஒப்புகொண்டவன் பாதி திருந்தி விட்டான் என்பது எவ்வளவு உண்மையோ எனக்கு தெரியாது ஆனால் நாம் செய்த பல தவறுகளை ஒப்புகொல்லாமல் வாழ்பவர்கள் தம் நம்மில் பலர்...
நீண்ட நாளைக்கு பிறகு இந்தியா வில் ஒரு சராசரிக்கு மேலே உள்ள மனிதனை நான் பார்க்கிறேன்...
Post new comment