
நெஞ்சு பொறுக்கு தில்லையே --இந்த
நிலை கெட்ட மாணவர்களை பார்த்தால்,
மேல் சாதி, கீழ் சாதி என்பார் --இதை
மறந்தவர்கள் யாருமில்லை அவனியிலே;
கொஞ்ச நேரமா அடித்தார்கள்? --ஒரு
நிமிடம் வரை வெறியேடு அடித்தார்கள்;
சாதிவெறி பிடித்த மாணவர்களே --நீங்கள்
நாளைய இந்தியாவின் தலைவர்களா
இல்லை தலைவலிகளா? --இதை
நினைந்து நினைந்து மனம் வெறுக்குதிலையே!
என்ன கொடுமை சார் இது!
கிலோ 1 ருபாய்க்கு அரிசி கிடைக்கிறது
ஆனால், உப்பின் விலை கிலோ 8 ருபாய்னு
நினைத்து விஜயகாந்த் சொல்றாறு
என்ன கொடுமை சார் இது!
1405 ஆயுள் தண்டனை கைதிகளை
விடுதலை செய்ததையொட்டி
கம்யூனிஸ்ட் சொல்றாங்க
என்ன எழுதுவதென்பது என்று தெரியவில்லை..
எதையாச்சும் எழுதனுமே!
அரசியல் பத்தி எழுதவா..
அழுக்குமூட்டை பத்தி எழுதவா
இரண்டிலும் அழுக்கு இருக்கிறதே..
அழுக்கை அகற்றுபவன் ஒருவன் வருவானோ
வருபவனைப் பற்றி எழுதவா...?
உன்னால் உலக நிகழ்வுகளை அறிந்து கொள்கிறேன்,
உன்னால் ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெருகிறேன்,
உன்னுடன் எப்பொழுதும் ஒட்டி உறவாடி வருகிறேன்,
உன்னுல் ஒலியும் ஒளியும் பார்த்து மகிழ்கிறேன்,
காதல் என்பது பொய்
வாழ்க்கை என்பது பொய்
உலகம் என்பது பொய்
அன்பு என்பது பொய்
பண்பு என்பது பொய்
பணம் என்பது பொய்
சொந்தம் என்பது பொய்
பந்தம் என்பது பொய்
உண்மை என்பது பொய்
மேலிருக்கும் வரிகளும் பொய்!
Recent comments
2 days 13 hours ago
3 days 1 hour ago
2 weeks 5 days ago
2 weeks 6 days ago
3 weeks 2 hours ago
3 weeks 2 hours ago
3 weeks 5 days ago
3 weeks 6 days ago
3 weeks 6 days ago
3 weeks 6 days ago